பெண்களுக்கு டீன்ஏஜ் வயது தொடங்கிவிட்டாலே, நாம் அழகாக இருக்கிறோமோ இல்லையா என்ற சந்தேகம் வந்துவிடும். கண்ணாடி முன் நின்று அடிக்கடி முகத்தை பார்த்து கொள்வர். முகத்தில் ஒன்றிரண்டு பருக்கள் வந்தாலே போதும், தனது அழகே போய் விட்டதாக எண்ணி மிகவும் வருத்தப்படுவர். டீன் ஏஜில் பருக்கள் வருவது இயல்பு தான். அதை தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.
பருக்கள் வருவதற்கான காரணங்கள்:
* எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக சுரப்பதால் பருக்கள் வரலாம்.
* சருமத்தை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் பருக்கள் வரலாம்.
* பெரும்பாலும் மாதவிடாய் காலங்களில் பருக்கள் வரலாம்.
* அதிக நேரம் வெயிலில் அலைந்தால் உஷ்ணமும், தூசியும் கலந்து பருக்கள் உண்டாகலாம்.
பருக்கள் தோன்றினால் செய்யக் கூடாதவை:
* அடுத்தவர் பயன்படுத்திய சோப், டவல் போன்றவற்றை பயன் படுத்தக் கூடாது.
* பருக்கள் உள்ளவர்கள் காபி, டீ, கோகோ கலந்த பானங்களை அருந்தக் கூடாது.
* சிப்ஸ், சாக்லேட் போன்ற கொழுப்பு மற்றும் எண்ணெய் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
* நகம் விஷத்தன்மை உடையது. எனவே, பருக்களை நகத்தினால் கிள்ளக் கூடாது. அப்படி செய்தால் பருக்கள் இன்னும் அதிகமாக பரவிடுமே தவிர குறையாது.
* உஷ்ணக்காற்று முகத்தில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
* பொடுகு இல்லாமல் கூந்தலை பராமரிக்க வேண்டும். தலையணை உறையை அடிக்கடி துவைக்க வேண்டும். தலையிலிருந்து பொடுகு உதிர்ந்து தலையணையில் விழும். அதில் முகத்தை வைத்து படுக்கும் போது பருக்கள் தோன்றும்.
Very nice
ReplyDelete